மு. வீரபாண்டியன், மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் 13.09.2025 சென்னை , சூளைமேடு அமீர்ஜான் தெருவில் உள்ள சென்டிரல் வங்கி ஊழியர் சங்க விருந்தினர் விடுதி – கூட்ட அரங்கில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் டி எம் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, தேசியச் செயலாளர்கள் டாக்டர் கே. நாராயணா, ஆனிராஜா, மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள் 110 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த 18.08.2025 ஆம் சேலத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாநில நிர்வாகக் குழு தேர்வு, மாநிலச் செயலாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
நிர்வாகக் குழு தேர்வு
மாநிலக் குழு கூட்டத்தில் கீழ்கண்ட
1).மூ.வீரபாண்டியன்
2).நா.பெரியசாமி
3).டி.எம்.மூர்த்தி
4).பி.பத்மாவதி
5).க.சந்தானம்
6).வஹிதா நிஜாம்
7).வை.சிவபுண்ணியம்
8).எம்.ரவி
9).தி.ராமசாமி
10).எம்.ஆறுமுகம்
11).மு.கண்ணகி
12).டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்
13).வை.செல்வராஜ்
14).டி.ராமச்சந்திரன்
15).எம்.லகுமையா
16).பி.எஸ்.மாசிலாமணி
17).க.மாரிமுத்து
18).எம்.ராதாகிருஷ்ணன்
19).மு.அ.பாரதி
20).அ.மோகன்
21).எஸ்.கலைச்செல்வம்
22).சு.மோகன்குமார்
23).முத்து.உத்திராபதி
24).சு.இசக்கிதுரை
25).த.செங்கோடன்
26).எஸ்.தேவராஜன்
27).பி.துரை
28).பொ.லிங்கம்
29).க.பாரதி
30).அ.பாஸ்கர்
31).திருச்சி.எம்.செல்வராஜ்
நிரந்தர அழைப்பாளர்கள்
1).த.லெனின்
2).கே.எம்.இசாக்
3).சி.சிவசாமி
மூன்று நிரந்தர அழைப்பாளர்களும் 31 உறுப்பினர்கள் கொண்ட மாநில நிர்வாகக் குழு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது
மாநிலச் செயலாளர்
கடந்த 2015 ஆம் ஆண்டில் கோவை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கட்சி அமைப்பு விதிப்படி 75 வயது வரம்பை பின்பற்றி பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார்.
புதிய செயலாளராக வட சென்னை வியாசர்பாடி மகசின்புரம் பகுதியைச் சேர்ந்த மு வீரபாண்டியன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ராணுவ வாகனம் ஓட்டுநர் குடும்பத்தில் 1961 டிசம்பர் 31 பிறந்த மு வீரபாண்டியன், அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பெற்றவர்.
- சிறுவயதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் இணைந்து அமைப்பு ரீதியாக செயல்படத் தொடங்கினார். அந்த அமைப்பின் கிளைச் செயலாளர், பகுதிக் குழு செயலாளார், மாவட்டச் செயலாளர், மாநிலச் செயலாளர் என பல நிலைகளில் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டவர்.
வேலையின்மை பிரச்சனையை முன் வைத்து, இந்தியாவைக் காப்போம், இந்தியாவை மாற்றுவோம் என்ற கோரிக்கை மீது கன்னியாகுமரியில் இருந்து புது டெல்லி வரை சைக்கிள் பரப்புரை மேற்கொண்ட அணியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் என செயல்பட்டு, 2008 ஆம் ஆண்டில் மாநில செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மாநிலத் துணைச் செயலாளர் பொறுப்பிலும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்பிலும் செயல்பட்டு வந்தவர்.
கட்சியின் 25 வது அகில இந்திய மாநாடு 21.09.2025 முதல் 25 .09.2025 முடிய பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெறுகிறது . இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து முன்னணி நிர்வாகிகள் 110 பேர் பிரதிநிதிகளாக செல்கிறார்கள். மாநாட்டிற்கு சென்று வந்த பிறகு மாநிலத் துணைச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு